எனது உள்ளக்குமுறல்களை அப்படியே பிரதிபலிக்கிறது இந்த பேட்டி. தாமரை அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
அன்பர் செந்தில் குமார் (மிக கேவலமான பின்னூட்டம் கொடுத்த உயர்ந்த உள்ளம் ) போன்ற தமிழ்வாதிகள் இருக்கும் வரை, இந்த உலகம் இந்த தமிழ் சமூகத்தை ஏளனமாக பார்ப்பதில் ஆச்சரியமில்லை. முத்துக்குமார் பிறந்த அதே மண்ணிலா நீங்கள் பிறந்தீர்கள் ?
அரசாங்கம் என்பது மக்களுக்காக, மக்கள் உருவாக்குவது, இவ்வளவு தமிழ் மக்களின் உணர்வை மீறி தனது சபதத்தை நிறைவேற்றிக்கொண்ட நமது மத்திய அரசியல்வாதிகளும் , அதற்க்கு சுத்தி தப்பாமல் ஜால்ரா போட்டு, கூடவே இருந்து காட்டி கொடுத்த நமது தமிழக அரசியல்வாதிகளும். பழுத்த ஞானி போல் பின்னூட்டம் எழுதும் செந்தில் குமார் போன்ற அன்பர்களும், இருக்கும் வரை இந்த உலகம் நம்மை ஏளனமாக பார்ப்பதில் ஆச்சரியமில்லை.
ஒரு ஜெர்மானிய பழமொழி ஞாபகம் வருகிறது.
"திங்களன்று பக்கத்துக்கு வீட்டுக்காரனை கைது செய்தனர்,
நான் ஏனென்று கேட்கவில்லை,
செவ்வாயன்று எதிர்புற வீட்டுக்காரனை கைது செய்தனர்,
நான் ஏனென்று கேட்கவில்லை,
புதனன்று என்னை கைது செய்தனர்,
ஏனென்று கேட்க யாருமில்லை "
உங்களுக்கு இனப்பற்று வேண்டாம், அது ஊட்டி வருவது அல்ல. ஒரு மனிதாபிமானம் கூடவா கிடையாது ?
ஒரு காக்கை இறந்தால் கூட நூறு காக்கைகள் அலறுமடா.
ஒரு இனம் கண் முன்னே அளிக்கபடுகிறது, கேட்க கூடாதம், கேட்டால் இறையாண்மைக்கு எதிராம், அதை நக்கல் செய்ய வேறு ஒரு கூட்டம்.
நீங்களும் வேண்டாம் உங்கள் கட்சிகளும் வேண்டாம்.
கேவலத்தின் உட்சம் இன்றைய அரசியல்வாதிகளுக்கு ஒட்டு போடுவது,
அதனின் கேவலம் அதற்க்கு பணம் வாங்குவது.
தயவு செய்து அனைவரும் "49 - O " பிரிவால் வாக்களித்து நமது எதிர்ப்பை அகிம்சை முறையில் வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
-சரவணன்
http://www.vikatan.com/av/2010/oct/27102010/av0105.asp
No comments:
Post a Comment